Skip to main content

உடுமலையில் திறனறிவுப் போட்டி:மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு


தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் நடைபெறும் திறனறிவுப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி கடைபிடி
க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப இயக்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவை சார்பில், உடுமலை பூங்கா நகராட்சி விரிவாக்க நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 25-ஆம் தேதி திறனறிவுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அறிவியல் கண்காட்சி:
ஒவ்வொரு பிரிவிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு என ஒரு பள்ளிக்கு 6 படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். படைப்புகளை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு காட்சிக்கு வைக்க வேண்டும்.
போட்டிகளின் விவரம்:
பேச்சுப் போட்டி:
தலைப்பு: நீ விரும்பும் அறிவியல் அறிஞரும், அவரது கண்டுபிடிப்பும். (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அன்றாட வாழ்வில் அறிவியலின் தாக்கம்.
(9,10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: எனது பார்வையில் அறிவியல் (11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
ஓவியப் போட்டி:
தலைப்பு: தண்ணீர், தண்ணீர் (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: வியத்தகு விண்வெளி (9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அறிவியல் அற்புதம் (11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள், கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இயக்கம், பி-7 வித்யாசாகர் வீதி, காந்தி நகர், உடுமலை-642154. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்: 99424-67764, 99656-44666, 89739-93331.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு