Skip to main content

உடுமலையில் திறனறிவுப் போட்டி:மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு


தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் நடைபெறும் திறனறிவுப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி கடைபிடி
க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப இயக்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவை சார்பில், உடுமலை பூங்கா நகராட்சி விரிவாக்க நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 25-ஆம் தேதி திறனறிவுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அறிவியல் கண்காட்சி:
ஒவ்வொரு பிரிவிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு என ஒரு பள்ளிக்கு 6 படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். படைப்புகளை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு காட்சிக்கு வைக்க வேண்டும்.
போட்டிகளின் விவரம்:
பேச்சுப் போட்டி:
தலைப்பு: நீ விரும்பும் அறிவியல் அறிஞரும், அவரது கண்டுபிடிப்பும். (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அன்றாட வாழ்வில் அறிவியலின் தாக்கம்.
(9,10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: எனது பார்வையில் அறிவியல் (11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
ஓவியப் போட்டி:
தலைப்பு: தண்ணீர், தண்ணீர் (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: வியத்தகு விண்வெளி (9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அறிவியல் அற்புதம் (11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள், கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இயக்கம், பி-7 வித்யாசாகர் வீதி, காந்தி நகர், உடுமலை-642154. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்: 99424-67764, 99656-44666, 89739-93331.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.