Skip to main content

உதவிப் பேராசிரியர் நியமனம்: மேலும் 6 பாடங்களுக்கு பிப்ரவரி 25-இல் நேர்முகத் தேர்வு


அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் மேலும் 6 பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093
உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கு விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உளவியல், சம்ஸ்கிருதம், சமூகவியல், காட்சித் தகவலியல், இந்திய கலாசாரம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே அனுப்பப்படும் எனவும், இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்