Skip to main content

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணை
ப்பாளர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கடந்த 1-1-2006-இல் பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 6,000 முதல் 8,000 உதவிப் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28-5-2012 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 1,244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,876 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மேலும், சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளதுபடி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதுபோல், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலம் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை.
எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24,25,26 தேதிகளில் சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்