Skip to main content

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணை
ப்பாளர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கடந்த 1-1-2006-இல் பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 6,000 முதல் 8,000 உதவிப் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28-5-2012 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 1,244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,876 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மேலும், சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளதுபடி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதுபோல், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலம் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை.
எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24,25,26 தேதிகளில் சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா