Skip to main content

பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்
டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூரில் நேற்று நடந்தது. அறை கண்காணிப்பாளர்களுக்கு புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. சிலருக்கு 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களில் பணி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பழநி,
வேடசந்தூரில் ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதேநிலை மற்ற மாவட்டங்களிலும் உள்ளதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சலேத்ராஜா, ராமகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது: புதிய முறையில் 15 கி.மீ., தூரத்திற்குள் பணி வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறையை மீறி 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் தேர்வு பணியை புறக்கணிப்போம், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்