Skip to main content

மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு,


அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது. வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்தும்
வகையில், மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்றல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளால், அவர்கள் இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்கு, ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது; அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர் பயிற்றுனர்களின் மூலம், ஆய்வும் நடத்தப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்ட அரசு துவக்க,
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளி, 293 நடுநிலைப்பள்ளி, 93 உயர்நிலைப்பள்ளி, 96 மேல்நிலைப்பள்ளிகளில், லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப்பாடங்களில், 2 முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியரின் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் குறித்து, 2ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆக., மற்றும் செப்., மாதங்களில், முதற்கட்ட ஆய்வு நடைபெற்றது.ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வு நடத்தி, "ஏ', "பி', "சி', "டி' கிரேடு மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மீண்டும் தற்போது ஆய்வு நடக்கிறது. இவ்விரு ஆய்வு மதிப்பீடுகளை கொண்டு, மாணவர்களின் திறன் அளவிடப்படுகிறது. முதற்கட்ட ஆய்வில், ஆங்கிலத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறைவாக இருந்தன,' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு