Skip to main content

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி :மூன்று நாட்களுக்குள் முடிக்க உத்தரவு


பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன், விடைத்தாள் தைக்கும் பணி நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

8.82 லட்சம் பேர்:தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி முதல், 31ம் தேதி வரை, பிள
ஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 2,300 தேர்வு மையங்களில், 8.82 லட்சம் மாணவர் எழுத உள்ளனர்.குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க, கடந்த பொதுத்தேர்வில் பல்வேறு மாற்றங்களை, தேர்வுத்துறை கொண்டு வந்தது.விடைத்தாளில் மாணவர் புகைப்படம், பார் கோடு, சீரியல் எண், ரகசிய குறியீடு எண் போன்றவை அடங்கிய, 'டாப்ஷீட்' அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையங்களுக்கு கார் மூலம் போலீசார் பாதுகாப்புடன், கேள்வித் தாள் கொண்டு செல்லப்பட்டது.

தொழில்நுட்பத்துடன் கூடிய, 'டாப்ஷீட்' தயாரிக்கப்பட்டதால், அவற்றை விடைத்தாளுடன் இணைக்க, தையல் இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு, கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நடைமுறையை நடப்பு ஆண்டிலும் செயல்படுத்த, தேர்வு துறை தீவிரமாக உள்ளது. நடப்பு ஆண்டில், விடைத்தாளின் பக்கங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. கல்வி மாவட்டங்களுக்கு, 10 நாட்களுக்கு முன், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து கடந்த வாரம், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.


தேர்வு மையங்கள்:தேர்வுத் துறை இயக்குனரகத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, கல்வி மாவட்டங்களுக்கு, 'டாப்ஷீட்' அனுப்பி வைக்கப்பட்டது. பின், தேர்வு மையங்களுக்கு,' டாப்ஷீட்' கொடுக்கப்பட்டு, விடைத்தாளுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் இப்பணியை முடித்து, விடைத்தாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா