Skip to main content

பிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் ந
டத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தேர்வுத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்கள், விடைத்தாள் மையங்கள், வினாத்தாள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஏற்பட்ட
தீ விபத்தில் விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின.இச்சம்பவத்தை அடுத்து விடைத்தாள் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளித்து அதை உறுதி செய்ய இணை இயக்குனர்களையும், கண்காணிப்பு பணி மேற்கொள்ள துணை செயலர் சுபோத் குமாரையும் நியமித்து கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கம்பி ஜன்னல் வசதியுள்ள மையங்களில் அதை சிமென்ட் மற்றும் செங்கலால் அடைக்கவும், மர பீரோக்கள் அல்லது தரையில் வைக்கப்பட்ட விடைத்தாள்களை ஸ்டீல் பீரோக்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தேர்வுத் துறை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மையங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செயலாளர் உத்தரவு என்ற பெயரில் முந்தைய பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குனர்கள் கடைசி நேரத்தில் வலியுறுத்துவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உதவிபெறும் பள்ளிகள், வகுப்பறைகளை தான் மையங்களாக பயன்படுத்த தேர்வு காலத்தில் வழங்குகின்றன. அவர்கள் ஜன்னல்களை அடைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்