Skip to main content

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல்4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது
                    
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில்
மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் அறிவியல் எழுத்து தேர்வுக்கு வழக்கம் போல 75 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டுக்கு 5 மதிப்பெண்ணும் ஆகும். செய்முறை தேர்வுக்கு 20 மதிப்பெண்கள்.


அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல் மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மார்ச் 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிறகு மார்ச் 11-ந் தேதி முதல் 14-ந் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் செய்முறை தேர்வில் எந்த வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு