Skip to main content

பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கொண்டாட யு.ஜி.சி. அறிவுறுத்தல்


 பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: ஒவ்வொரு ஆண்டு
ம், பிப்., 21ம் தேதியை, சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும் என, யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.
அதனால், மாத்ரிபாஷா திவஸ் என்ற பெயரில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், அன்றைய தினம் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பாட்டு போட்டி, பொது அறிவு நிகழ்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு போட்டிகளை நடத்தி, தாய்மொழியின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும்.
நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தாய்மொழியின் முக்கியத்துவம்; கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதலில் தாய்மொழியின் பங்கு, தாய்மொழியை பாதுகாத்தல், வளர்த்தல், பிற மொழிகளை கற்றல், கூடுதல் மொழிகளை கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும், அம்சங்களும் இடம் பெற வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்