Skip to main content

பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கொண்டாட யு.ஜி.சி. அறிவுறுத்தல்


 பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: ஒவ்வொரு ஆண்டு
ம், பிப்., 21ம் தேதியை, சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும் என, யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.
அதனால், மாத்ரிபாஷா திவஸ் என்ற பெயரில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், அன்றைய தினம் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பாட்டு போட்டி, பொது அறிவு நிகழ்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு போட்டிகளை நடத்தி, தாய்மொழியின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும்.
நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தாய்மொழியின் முக்கியத்துவம்; கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதலில் தாய்மொழியின் பங்கு, தாய்மொழியை பாதுகாத்தல், வளர்த்தல், பிற மொழிகளை கற்றல், கூடுதல் மொழிகளை கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும், அம்சங்களும் இடம் பெற வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.