Skip to main content

குரூப் - 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

குரூப் - 1 பிரிவில், 79 பதவி களுக்கான முதல் நிலை தேர்வை, 2014 ஜூலை, 20ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற, 4,389 பேருக்கும், தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ் விவரம், தேர்வுக்கட்டணம் குறித்த குறிப்பாணை, விரைவு தபால் மூலம், அனுப்பப்பட்டு உள்ளது. அந்த குறிப்பாணை, தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாணையில் கேட்கப்பட்டு உள்ள சான்று இடப்பட்ட சான்றிதழ்களின் நகலை, பிப்., 17 அல்லது அதற்கு முன், தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.