Skip to main content

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான உதவிகள்: கலெக்டர் சுப்பையன் பேச்சு


தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் என்
.சுப்பையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் விழிப்புணர்வு கலைப்பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 14 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வுக்காக கலைப் பயணம் தொடர்ந்து நடைபெறும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு ஏதுவாக இணைந்து பணியாற்றுவார்கள். பொது மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் 100 சதவிகிதம் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
மேலும் தரமான கல்வி வழங்குவதற்கு 14 வகையான உதவிகளை விலையில்லாமல் வழங்கி வருகிறது. விஷன் 2023 தொலைநோக்கு திட்டம் வெற்றி பெறுவதற்கு தமிழகம் கல்வியில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராம பகுதிகளில் கல்விக்கான திட்டங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு 25 சதவிகிதம் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து, படிக்க வைப்பதற்கு அரசே செலவு செய்கிறது. இந்த கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே இந்த திட்டத்தின் மூலம் 100 சதவிகிதம் மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு கலைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். வே.தமிழரசு, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சண்முகவடிவு, உதவி திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.