Skip to main content

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான உதவிகள்: கலெக்டர் சுப்பையன் பேச்சு


தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் என்
.சுப்பையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் விழிப்புணர்வு கலைப்பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 14 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வுக்காக கலைப் பயணம் தொடர்ந்து நடைபெறும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு ஏதுவாக இணைந்து பணியாற்றுவார்கள். பொது மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் 100 சதவிகிதம் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
மேலும் தரமான கல்வி வழங்குவதற்கு 14 வகையான உதவிகளை விலையில்லாமல் வழங்கி வருகிறது. விஷன் 2023 தொலைநோக்கு திட்டம் வெற்றி பெறுவதற்கு தமிழகம் கல்வியில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராம பகுதிகளில் கல்விக்கான திட்டங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு 25 சதவிகிதம் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து, படிக்க வைப்பதற்கு அரசே செலவு செய்கிறது. இந்த கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே இந்த திட்டத்தின் மூலம் 100 சதவிகிதம் மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு கலைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். வே.தமிழரசு, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சண்முகவடிவு, உதவி திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு