Skip to main content

ஐடிஐ படித்தவர்களுக்கு பிப்.11இல் தொழில் பழகுநர் மேளா


மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்ட ஐடிஐ மாணவர்களுக்கான தொழில் பழகுநர் மேளா, மதுரையில் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், கம்மியர் (மோட்டார் வண்டி) போன்ற தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறுபவர்கள், பாதியளவு தொழில் திறனையே பெற்றிருப்பர். இவர்கள், தொழிற் பிரிவுகளுக்கு ஏற்றவாறு நிறுவனங்களில் நேரடியாக இயந்திரங்களை கையாளக்கூடிய வாய்ப்பினை இப்பயிற்சி வழங்குகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர் பயிற்சி நடைபெறும். இதில், பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மண்டலப் பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்-9, சுமதி இல்லம்,முதல் கிழக்குத் தெரு, கே.கே. நகர், மதுரை-20, தொலைபேசி: 0452-2566200. உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மதுரை- 7, செல்லிடப்பேசி- 9442156620.
மேலும், தொழில் பழகுநர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, 11.2.2015 அன்று மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏராளமான தொழிற் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றன. தொழில் பழகுநர் தேர்வு மேளா என்ற பெயரில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. ஐடிஐ முடித்த மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்