Skip to main content

ஐடிஐ படித்தவர்களுக்கு பிப்.11இல் தொழில் பழகுநர் மேளா


மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்ட ஐடிஐ மாணவர்களுக்கான தொழில் பழகுநர் மேளா, மதுரையில் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், கம்மியர் (மோட்டார் வண்டி) போன்ற தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறுபவர்கள், பாதியளவு தொழில் திறனையே பெற்றிருப்பர். இவர்கள், தொழிற் பிரிவுகளுக்கு ஏற்றவாறு நிறுவனங்களில் நேரடியாக இயந்திரங்களை கையாளக்கூடிய வாய்ப்பினை இப்பயிற்சி வழங்குகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர் பயிற்சி நடைபெறும். இதில், பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மண்டலப் பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்-9, சுமதி இல்லம்,முதல் கிழக்குத் தெரு, கே.கே. நகர், மதுரை-20, தொலைபேசி: 0452-2566200. உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மதுரை- 7, செல்லிடப்பேசி- 9442156620.
மேலும், தொழில் பழகுநர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, 11.2.2015 அன்று மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏராளமான தொழிற் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றன. தொழில் பழகுநர் தேர்வு மேளா என்ற பெயரில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. ஐடிஐ முடித்த மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.