Skip to main content

1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்கிறது அரசு

தமிழக போலீசில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகபோலீசில், 20,௭16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சட்டம்- - ஒழுங்கு பிரிவில், முதற்கட்டமாக, 1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.அதன் விவரம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால், போலீஸ் சார்பு
ஆய்வாளர் (தாலுகா) எஸ்.ஐ., பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 1,078 பணியிடங்களில், 984 பேர், நேரடி தேர்வு வழியாகவும், 94 பேர், காவல் துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் மூலமும் நிரப்பப்பட உள்ளனர்; இவற்றுக்கு, தனித்தனியே எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.காவல் துறை சார்ந்தவர்கள், பொது ஒதுக்கீட்டிற்கான வயது, பிற தகுதிகள் பெற்றிருப்பின், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.பொதுப்பிரிவினர், 2015 ஜூலை 1ம் தேதி, 20 வயது நிறைவு பெற்றும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், பணியிலிருந்து விடுபட்டு, மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால்விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு, ௪௫. வின்ணப்பிப்போர், பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றோர், விண்ணப்பிக்க இயலாது.www.tnusrbexams.netஇணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, மார்ச் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வுகள், பொது ஒதுக்கீட்டுக்கு, மே 23ம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கு, மே 24ம் தேதியும் நடத்தப்படும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா