Skip to main content

105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்


''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறிய
தாவது: பாஸ்போர்ட் பெற 13 வித முகவரி ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன. அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களும் உண்டு. தற்போது மக்கள் கோரிக்கையை ஏற்று தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அந்த புத்தகங்களையும் முகவரி ஆவணமாக காட்டி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 105 வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி ெவளியிட்டுள்ளது. அந்த விவரங்களை www.passportindia.gov.in மற்றும் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் அறியலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் துறை தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் மட்டுமே தடையில்லா சான்று வழங்கலாம் என மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இவற்றில் பணிபுரியும் பி, சி, டி பிரிவு ஊழியர்கள் இனி பணியமர்த்தும் அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளை சேர்ந்த பி,சி,டி பிரிவு ஊழியர்கள் அந்த துறை பணி நியமன அதிகாரியிடம் தடையில்லா சான்று பெறலாம்.
முதுநிலை போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை எஸ்.பி.,யிடம், டி.எஸ்.பி., முதல் கூடுதல் எஸ்.பி., வரை டி.ஜி.பி.,யிடம், எஸ்.பி.,க்கள் உள்துறை அமைச்சகத்திடமும் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு