Skip to main content

நெதர்லாந்தில் புத்தர் சிலைக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த துறவி

நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான  பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம்
நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி,  அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற  சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற துறவியாய் இருக்கலாம்  என யூகிக்கிறோம். இவர் இறப்பிற்கு பின், இவரது உடல் புத்தர் சிலைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இவரே அமர்ந்த நிலையில் இறந்து புத்தர்  சிலையை அமைக்க கூறியிருக்கலாம். 

எனினும் இதை உறுதி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் ஒரு பகுதியை மரபணு(DNA) சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளனர். தற்போது  ஹங்கேரி நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் இந்த புத்தர் சிலை, அங்குள்ள அருங்காட்சியகத்தில் மே மாதம் வரை கண்காட்சிக்கு வைக்கப்படும் என  ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு