Skip to main content

எஸ்.ஐ. நேரடி நியமனத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி


காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால்
இந்திய குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 23-ஆம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறும்.
984 காலிப் பணியிடங்கள், 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு (காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதார்களைக் கொண்டு நிரப்பப்படும்) இந்தத் தேர்வு நடைபெறும்.
இந்த காலிப் பணியிடங்களில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் காவல் துறைக்கு 20 சதவீதம், விளையாட்டுத் துறைக்கு 10 சதவீதம், சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீடு 10 சதவீதமும் ஆகும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியின்போது 20 வயது நிறைவு பெற்றவராகவும், 28 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு, வயது உச்ச வரம்பு தளர்வு, தகுதிகள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், நேர்காணல் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா