Skip to main content

அறிவுத் திறனை வளர்க்கும் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும்


ஆசிரியர்களிடம் கேள்வியை எழுப்பி, அதன் மூலம் அறிவுத் திறனை வளர்க்கும் அடிப்படைக் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இயக்
குநர் விஞ்ஞானி பி.சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
விஐடியில் தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை கண்காட்சிப் போட்டியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், பல தலைமுறைகளுக்கு முன்பும் நாம் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை முழுமையாக ஆவணப்படுத்தாமல் போனதாலும், பலவற்றை காப்பாற்ற முடியாமல் போனதாலும் பழம்
பெருமையை நாடு இழந்து நிற்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் பெற்றிட அடிப்படை அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார் சிவகுமார்.
விஐடி துணைத் தலைவர்
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியது:
பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பொறியியல் அகாதெமி கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையாக செயல்படுத்துவதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் ஜி.வி.செல்வம்.
அறிவியல் போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்றனர்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு