Skip to main content

ஐஏஎஸ் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் பங்குபெறுவதற்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் ஃபோகஸ் அகாதெமி
அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அகாதெமி சார்பில் வழங்கப்படும் இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு வருகிற 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.
பட்டப் படிப்பு முடித்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். தகுதி பெறும் முதல் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நேரில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9442722537 என்ற கைப்பேசியில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு