Skip to main content

ஐஏஎஸ் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் பங்குபெறுவதற்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் ஃபோகஸ் அகாதெமி
அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அகாதெமி சார்பில் வழங்கப்படும் இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு வருகிற 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.
பட்டப் படிப்பு முடித்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். தகுதி பெறும் முதல் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நேரில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9442722537 என்ற கைப்பேசியில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா