அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரி விடுதிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு பிற்படுத்தப்பட்டோ
ர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 8 பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதிகள்: பகுதி நேரப்பணி, தொகுப்பூதியம் மாதம், ரூ. 2,000 மட்டுமே, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள் மட்டும், வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதும், அதிகபட்சம் பொதுப்பிரிவினர்களுக்கு 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 32 வயதும் இருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்கள் தங்கள் விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் ஜன. 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அளிக்க வேண்டும்.