Skip to main content

அரசுப் பள்ளி கல்லூரி விடுதிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரி விடுதிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு பிற்படுத்தப்பட்டோ
ர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 8 பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதிகள்: பகுதி நேரப்பணி, தொகுப்பூதியம் மாதம், ரூ. 2,000 மட்டுமே, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள் மட்டும், வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதும், அதிகபட்சம் பொதுப்பிரிவினர்களுக்கு 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 32 வயதும் இருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்கள் தங்கள் விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் ஜன. 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அளிக்க வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன