Skip to main content

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு: வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்


அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்ட
த்தைக் கைவிட வேண்டும், அரசுத் துறைகளில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 22-ஆம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவித்தன.
இதன்படி, வியாழக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், ஊராட்சித் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் சுமார் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து, மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதால், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.
வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றன. தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா