Skip to main content

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு: வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்


அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்ட
த்தைக் கைவிட வேண்டும், அரசுத் துறைகளில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 22-ஆம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவித்தன.
இதன்படி, வியாழக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், ஊராட்சித் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் சுமார் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து, மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதால், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.
வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றன. தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு