தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தனித்தேர்வர்களுக்கான மறுதேர்வு விண்ணப்பப் பதிவு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி
நிறுவன முதல்வர் அ.பஷீர் அகமது சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி: வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவிகளுக்கான மறுதேர்வு விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள்
வலைதளத்தில் திங்கள்கிழமை (19ஆம் தேதி) முதல் ராணிப்பேட்டை பீட்டி மெமோரியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவானது மறு அறிவிப்பு வரும் வரை (இம்மாத இறுதி)ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே தனித்தேர்வர்கள் மறு அறிவிப்பில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி தங்களின் தனித்தேர்வருக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்.