Skip to main content

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்மறுதேர்வுப் பதிவு ஒத்திவைப்பு


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தனித்தேர்வர்களுக்கான மறுதேர்வு விண்ணப்பப் பதிவு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி
நிறுவன முதல்வர் அ.பஷீர் அகமது சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி: வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவிகளுக்கான மறுதேர்வு விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் 
வலைதளத்தில் திங்கள்கிழமை (19ஆம் தேதி) முதல் ராணிப்பேட்டை பீட்டி மெமோரியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவானது மறு அறிவிப்பு வரும் வரை (இம்மாத இறுதி)ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே தனித்தேர்வர்கள் மறு அறிவிப்பில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி தங்களின் தனித்தேர்வருக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா