Skip to main content

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்மறுதேர்வுப் பதிவு ஒத்திவைப்பு


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தனித்தேர்வர்களுக்கான மறுதேர்வு விண்ணப்பப் பதிவு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி
நிறுவன முதல்வர் அ.பஷீர் அகமது சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி: வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவிகளுக்கான மறுதேர்வு விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் 
வலைதளத்தில் திங்கள்கிழமை (19ஆம் தேதி) முதல் ராணிப்பேட்டை பீட்டி மெமோரியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவானது மறு அறிவிப்பு வரும் வரை (இம்மாத இறுதி)ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே தனித்தேர்வர்கள் மறு அறிவிப்பில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி தங்களின் தனித்தேர்வருக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு