Skip to main content

குவைத் நாட்டில் சமையல், ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் தேவை - தமிழக அரசு தகவல்


குவைத் நாட்டில் சமையல் மற்றும் ஓட்டுனர் பணிக்கு செல்லவிரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலை
வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கை:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் மோகன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் வருகிற 31ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அரசினர் பெண்கள்  உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அரங்கமும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெறும்.  அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அரங்கில் நிறுவனத்தின் செயல்பாடுகள், தற்போதுள்ள பணி காலியிடங்கள் ஆகிய விவரங்களை அறிந்து  கொள்வதுடன் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.


தற்போது, குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்பு துறையில் பணிபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில்  மேற்பார்வையாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன்  5 வருட அனுபவம் பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள், பத்தாம் வகுப்பு  தேர்ச்சி மற்றும் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன  ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள். 

மேலும், சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவ மனைகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட அலோபதி  மருத்துவர்கள் மற்றும் பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்  செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை 044-22502267/ 22505886/ 08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது  omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு