விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோ நிறுவன புதிய தலைவராகவும் ஏ.எஸ். கிரண் குமார் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்தி
ய அமைச்சரவைக் குழு, கிரண் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. அவரது பதவி காலம், 3 ஆண்டுகள் ஆகும்.
பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரண் குமார், இஸ்ரோவில் 1975ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவின் முக்கிய சாதனை திட்டங்களான சந்திராயன், செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி ஆகியவற்றில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இஸ்ரோவில் இருக்கும் அதிகாரிகளில், பதவி மூப்பின் அடிப்படையில் அதன் தலைவராக கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.