Skip to main content

போகி விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்


போகிப் பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா இன்று (12.01.2015) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்
சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி போகி பண்டிகையின் போது ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. 

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள்  பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றது. 

இதன் காரணமாக கடந்த 4-5 வருடங்களாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பர் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், போகிப் பண்டிகையின்போது கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வாசிக்க மாணவ மாணவிகள், பொதுமக்கள், அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியரிடம் போகி பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். விழாவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன