Skip to main content

போகி விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்


போகிப் பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா இன்று (12.01.2015) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்
சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி போகி பண்டிகையின் போது ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. 

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள்  பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றது. 

இதன் காரணமாக கடந்த 4-5 வருடங்களாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பர் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், போகிப் பண்டிகையின்போது கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வாசிக்க மாணவ மாணவிகள், பொதுமக்கள், அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியரிடம் போகி பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். விழாவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு