Skip to main content

விளையாட்டு வீரர்களுக்கு முதன்மை கணக்காயர் அலவலகத்தில் பணி


சென்னையில் செயல்பட்டு வரும் முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் ஆடிட்டர், அக்கவுன்டென்ட் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  குருப் 'சி'
காலியிடங்கள்: 05.
துறைவாரியான காலியிடங்கள்:
கோல்கீப்பர் - 01
டிபெண்ஸ் - 02
பார்வர்டு - 02
அலுவலகம்: சென்னை முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

பணி: குருப் 'சி'
காலியிடங்கள்: 05
கிரிக்கெட்டில விக்கெட் கீப்பர் - 01
வேகப்பந்து வீச்சாளர் - 01
சுழற்பந்து வீச்சாளர் - 01
கால்பந்தில் பார்வர்டு - 01
டிபெண்டர் - 01.
அலுவலகம்: சென்னை மற்றும் புதுச்சேரியிலுள்ள அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

பணி:
காலியிடங்கள்: 01
ஷட்டில் பேட்மிண்டன் - 01
அலுவலகம்: முதன்மை வணிக தணிக்கை இயக்குநர் அலுவலகம்:
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டென்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 2 ஆண்டுகளுக்குள் துறைவாரியான தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
வயதுவரம்பு: 18.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: வீரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ சம்பந்தப்பட்ட விளையாட்டில் பிரிவில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக அளவிலோ, தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பள்ளி அணி சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
K. Ramachandran,
Senior Accounts Officer (Admn.,),
O/o The Prinicipal Accountant General (A -E),
361, Annasalai, Teynampet, CHENNAI 600 018.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.agae.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு