Skip to main content

பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம்: தமிழக அஞ்சலகங்களில் அறிமுகம்


மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் தமிழக அஞ்சலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் த
லைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறினார்.
மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத் திட்ட அறிமுக விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:
பெண் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) ஹரியாணா மாநிலம், பானிபட் நகரில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் காப்பாளர் உதவியுடன் சேமிப்புக் கணக்கு தொடங்க முடியும்.
கணக்கு தொடங்குவதற்கு ரூ.1,000 குறைந்தபட்ச தொகையாகும். அதைத் தொடர்ந்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளில் பணம் செலுத்தலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம்.
கணக்கு தொடங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம். இதற்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகும். இது வேறு எந்த ஒரு சேமிப்புக் கணக்கு திட்டத்துக்கும் இல்லாத சிறப்பாகும்.
ஒரு மாதம் அல்லது ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த பின், கடந்த கணக்கு ஆண்டு இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணம் பெற்று கொள்ளும் வசதியும், விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.
இத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் இந்தியா முழுவதும் ஒரு கோடி வங்கிக் கணக்குகளும், தமிழக அஞ்சல் வட்டத்தில் 4.5 லட்சம் கணக்குகளும், சென்னை நகர மண்டலத்தில் 1.10 லட்சம் கணக்குகளும் தொடங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் "சுகன்யா சம்ருத்தி யோஜனா' திட்டத்தின் கீழ் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கிய 16 மாதக் குழந்தை உள்பட 10 பேருக்கு சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை மெர்வின் அலெக்ஸாண்டர் வழங்கினார்.
மயிலாப்பூர் தலைமை அஞ்சலக அதிகாரி ஜமுனா, கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ரங்கநாதன், கோட்ட உதவி கண்காணிப்பாளர் பானுமதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு