Skip to main content

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம்

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல்
அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களிலும் கிரேடு முறையை அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய கிரேடு முறை

அதன்படி கிரேடு ஓ. முதல் கிரேடு பி வரை அமல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கிரேடு ஓ- மதிப்பெண் 90.1 முதல் 100 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு ஏ பிளஸ் என்பது எக்ஸலன்ட். இது 80.1 முதல் 90 வரை உள்ள மதிப்பெண் ஆகும். அதைத்தொடர்ந்து கிரேடு ஏ- மிகவும் நல்ல மதிப்பெண் அதாவது 70.1 முதல் 80 மதிப்பெண் வரை ஆகும்.

கிரேடு பி பிளஸ் என்பது நல்ல மதிப்பெண் அதாவது 60.1 முதல் 70 மதிப்பெண் வரை ஆகும். பி கிரேடு என்றால் சராசரி மதிப்பெண்ணுக்கு அதிகமாக அதாவது 50.1 மதிப்பெண் முதல் 60 மதிப்பெண்வரை. கிரேடு சி என்பது சராசரி மதிப்பெண் அதாவது 50 முதல் 55 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு பாஸ் என்பது: தேர்ச்சி மதிப்பெண் கொண்டது. அதாவது 40 மதிப்பெண முதல் 50 மதிப்பெண் வரை உள்ளது ஆகும்.

இவ்வாறு கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு