Skip to main content

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம்

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல்
அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களிலும் கிரேடு முறையை அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய கிரேடு முறை

அதன்படி கிரேடு ஓ. முதல் கிரேடு பி வரை அமல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கிரேடு ஓ- மதிப்பெண் 90.1 முதல் 100 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு ஏ பிளஸ் என்பது எக்ஸலன்ட். இது 80.1 முதல் 90 வரை உள்ள மதிப்பெண் ஆகும். அதைத்தொடர்ந்து கிரேடு ஏ- மிகவும் நல்ல மதிப்பெண் அதாவது 70.1 முதல் 80 மதிப்பெண் வரை ஆகும்.

கிரேடு பி பிளஸ் என்பது நல்ல மதிப்பெண் அதாவது 60.1 முதல் 70 மதிப்பெண் வரை ஆகும். பி கிரேடு என்றால் சராசரி மதிப்பெண்ணுக்கு அதிகமாக அதாவது 50.1 மதிப்பெண் முதல் 60 மதிப்பெண்வரை. கிரேடு சி என்பது சராசரி மதிப்பெண் அதாவது 50 முதல் 55 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு பாஸ் என்பது: தேர்ச்சி மதிப்பெண் கொண்டது. அதாவது 40 மதிப்பெண முதல் 50 மதிப்பெண் வரை உள்ளது ஆகும்.

இவ்வாறு கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா