Skip to main content

கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சல் அலுவலர் பணிகளுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையக் கோட்ட
க் கண்காணிப்பாளர் எழில் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட சின்னப்புதூர், கிட்டாம்பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம், மங்களகரைப்புதூர், திங்களூர் ஆகிய கிளை தபால் அலுவலகங்களில் கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜெ.கிருஷ்ணாபுரம் பணியிடம் ஓ.பி.சி. பிரிவினருக்கும், மங்களகரைப்புதூர் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற இடங்களுக்கு, அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தகுதி, நிபந்தனை, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை கோட்டக் கண்காணிப்பு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினிப் பயிற்சி பெற்றவராகவும், 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா