Skip to main content

கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சல் அலுவலர் பணிகளுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையக் கோட்ட
க் கண்காணிப்பாளர் எழில் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட சின்னப்புதூர், கிட்டாம்பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம், மங்களகரைப்புதூர், திங்களூர் ஆகிய கிளை தபால் அலுவலகங்களில் கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜெ.கிருஷ்ணாபுரம் பணியிடம் ஓ.பி.சி. பிரிவினருக்கும், மங்களகரைப்புதூர் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற இடங்களுக்கு, அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தகுதி, நிபந்தனை, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை கோட்டக் கண்காணிப்பு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினிப் பயிற்சி பெற்றவராகவும், 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு