Skip to main content

அழகப்பா பல்கலைக்கழக இளங்கலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான இளங்கலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான நவம்பர்-2014-ல்நடைபெற்ற அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகளுக்கா
ன தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டுள்ளன.

பி.ஏ தமிழ், பி.லிட்., தமி்ழ், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ ஆங்கிலம் தொழிற்சார் கல்வி, பி.ஏ அரபிக்,பி.ஏ வரலாறு,அரசியல் அறிவியல், பி.எஸ்சி-யில் கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விங்கியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மென்பொருளியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் விலங்கு தொழில்நுட்ப வியல்,மின்னனுவியல் மற்றும் தொடர்பியல்,விலங்கியல்-தொழிலக நுண்ணுயிரியல், பி.சி.ஏ, பி.காம்., பி.காம் (சி.ஏ), பி.காம் (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.இ., மற்றும் பி.ஏ பொருளியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுமுடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (27.1.2015) மறு மதிப்பீட்டிற்கு விண்ணப் பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 பதிவாளர் அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரிலான வரைவோலையுடன் தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் கா. உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு