Skip to main content

சமையலர், உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

சிறை சமையலர் மற்றும் அரிசி ஆலை உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சமையலர் காலி பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்
டும். எம்.பி.சி வகுப்பினர் 02.07.1997 வரை, மாற்றுத்திறனாளிகள் 12.07.1991 வரை, பரிந்துரைக்கப்பட உள்ளது. 01.07.2014 தேதியில் 32 வயதிற்குள் இருத்தல்
வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு கீழான தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பிற்கான வயது வரம்பு தளர்வு விதி பொருந்தும். 

சிவகங்கை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரால் மானாமதுரை நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பிட்டர், வெல்டர், ஜெனரல் மெக்கானிக் என்டிசி முடித்திருக்க வேண்டும். பி.சி முன்னுரிமை இல்லாதவர்கள் 12.12.2001 வரை, பகிரங்க போட்டியாளர் 13.11.2000 வரை பரிந்துரைக்கப்பட உள்ளனர். 01.01.2015 தேதியில் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் 35 வயது, பி.சி, எம்.பி.சி 32 வயது, பகிரங்கபோட்டியாளர் 30 வயதிற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பணிக்கு வயது வரம்பு தளர்வு விதி பொருந்தாது. 

மேற்கண்ட தகுதியுடையோர் அனைத்து கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் ஜன.19 அன்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு