Skip to main content

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' :மாணவர்களை சந்திக்க திட்டம்

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்
அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்
' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

உளவியல் பாடம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உட்பட சில பள்ளிகளில், சில நாட்களாக, "மொபைல் கவுன்சிலிங்' வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, அவரின் நேர்முக உதவியாளர் பிரேம் சாகர் மற்றும் கல்வி அதிகாரிகள் மேற் பார்வையில் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில், கவுன்சிலிங் வழங்கி வரும், கோவையை சேர்ந்த உளவியல் டாக்டர் அருள் வடிவு கூறுகையில், ""மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெறுவது, அதற்கு தடையாக இருக்கும் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளை மையமாக கொண்டு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. எந்த வகுப்பில், எந்த மாணவன், படிப்பு, ஒழுக்கத்தில் சரியாக இல்லை என்பதை, தலைமையாசிரியர்கள் மூலம் அறிந்து, அந்த மாணவனிடம் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களின் பிரச்னைகளை அறிந்து, தீர்வு காணப்படுகிறது. அதன் மூலம், அந்த மாணவன், மாணவியர் தெளிவு பெற்று தனது அன்றாட செயல்பாடுகள், படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.

குடும்ப சூழ்நிலையால் குழப்பம்
இந்த கவுன்சிலிங்கில் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதில், "அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்து மாணவ, மாணவியரின், குடும்ப பின்னணி பரிதாபத்துக்குரியதாக உள்ளது. பெற்றோர் இல்லாததால், பிறரது ஆதரவில் வளர்வது, அதனால், பறிபோகும் அவர்களது அடிப்படை உரிமைகள்; பெற்றோரின் ஒற்றுமையின்மை; ஓயாத குடும்பச் சண்டை, அதனால், மாணவ, மாணவியருக்கு ஏற்படும் கவனச் சிதறல்; பெற்றோரின் ஊக்குவிப்பின்மை; தங்களது விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், ஒரு பள்ளி விட்டு வேறு பள்ளியில் இணைவது' உட்பட பல காரணங்கள் மாணவ, மாணவியரை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது.

மேலும், "குறிப்பிட்ட பாடத்தின் மீதான வெறுப்பு; அதை போதிக்கும் ஆசிரியர்கள் மீதான கடுப்பால், ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்து, அவர்களுக்கு கீழ் படியாமல் இருப்பது' போன்ற பிரச்னைகளும் உள்ளன. இவ்வாறான பிரச்னைகளில் சிக்கி, இருக்கும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது மனநிலையை மாற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டது. முடிவில், பெற்றோரை வரவழைத்து,"பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கை, பள்ளிகளில் அவர்களின் செயல்பாடுகளை, கண்காணிப்பதில் பெற்றோரும் பங்கெடுத்து கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.


வம்பை விலைக்கு வாங்கும் கோளாறுகள்...
வளர் இளம் பருவ கோளாறு, மாணவ, மாணவியர் பல வகைகளில் பாதிக்க செய்துள்ளது. "டிவி', சினிமாவால்,"டீன் ஏஜ்' மாணவர்கள், தங்களை ஒரு ஹீரோவாக பாவித்து, கீழ் படிதல், பொறுமை உட்பட பண்புகளை இழக்கின்றனர். எதிர்காலத்தில் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளாமல், பாக்கு போடுவது, புகைப் பிடிப்பது போன்ற தவறுகளை செய்து பார்க்க துணிகின்றனர் என்ற உண்மையும், கவுன்சிலிங் மூலம் தெரிய வந்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு