Skip to main content

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


அரியலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் சா
லை ஆய்வாளர் நிலை 2-ல் உள்ள காலிப்பணியிடங்கள் இரண்டு இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியுள்ள நபர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஐ.டி.ஐ. கட்டட வரைவாளர் அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்வித் தகுதிச் சான்றின் நகல் மற்றும் ஜாதிச் சான்றின் நகலுடன் விண்ணப்பத்தை சார் ஆட்சியர் அலுவலகம், அரியலூர் - 621704 என்ற முகவரிக்கு வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா