Skip to main content

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி


நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதி
வு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நேரடி மானியத் திட்ட முறை கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வரும் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பங்களை அளித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அறிய முடிந்தது.

இந்த நிலையில், கைப்பேசி மூலம் நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:



தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்            இண்டேன்    பாரத்கேஸ்

எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை

(17 இலக்க குறியீட்டு எண்) தெரிந்துகொள்ள    INDANE LPGID    LPGID

நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா

என்பதை அறிய                                                INDANE DBTLSTATUS    DBTLSTATUS

மானிய விலையில் எரிவாயு உருளை

எண்ணிக்கை அறிய                                           INDANE LPGQUOTA      LPGQUOTA

நேரடி மானியத் திட்ட முன்வைப்பு,

மானியத்தொகை விவரங்களை அறிய                INDANE SUBSIDY    LPGSUBSIDY

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்