Skip to main content

தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவு வெளியீடு


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரி
வு கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் நாள்காட்டி ஆண்டு மற்றும் துணைத் தேர்வுகள் டிசம்பர் 20 முதல் ஜன. 3 வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதித்தேர்வு முடிந்து 10 நாள்களுக்குள் ஏற்கெனவே சில பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இளநிலைப் பாடப் பிரிவில் இலக்கியம், புவியியல், முதுநிலைப் பாடப்பிரிவில் தமிழ், யோகாவும் மனித மாண்பும் முதலாமாண்டு, சான்றிதழ் பாடப்பிரிவில் தமிழ்ப்புலவர் பயிற்சி பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா