தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரி
வு கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் நாள்காட்டி ஆண்டு மற்றும் துணைத் தேர்வுகள் டிசம்பர் 20 முதல் ஜன. 3 வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதித்தேர்வு முடிந்து 10 நாள்களுக்குள் ஏற்கெனவே சில பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இளநிலைப் பாடப் பிரிவில் இலக்கியம், புவியியல், முதுநிலைப் பாடப்பிரிவில் தமிழ், யோகாவும் மனித மாண்பும் முதலாமாண்டு, சான்றிதழ் பாடப்பிரிவில் தமிழ்ப்புலவர் பயிற்சி பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன