Skip to main content

தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவு வெளியீடு


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரி
வு கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் நாள்காட்டி ஆண்டு மற்றும் துணைத் தேர்வுகள் டிசம்பர் 20 முதல் ஜன. 3 வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதித்தேர்வு முடிந்து 10 நாள்களுக்குள் ஏற்கெனவே சில பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இளநிலைப் பாடப் பிரிவில் இலக்கியம், புவியியல், முதுநிலைப் பாடப்பிரிவில் தமிழ், யோகாவும் மனித மாண்பும் முதலாமாண்டு, சான்றிதழ் பாடப்பிரிவில் தமிழ்ப்புலவர் பயிற்சி பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு