Skip to main content

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் பாலசவுந்தரி. இவருக்கு பி.எ
ட் மற்றும் எம்.ஏ. படிப்புகளுக்காக ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து எம்.எட். படிப்புக்காக 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தார். அந்த கோரிக்கையை, பரமக்குடி மாவட்டக்கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து பாலசவுந்தரி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, பாலசவுந்தரிக்கு 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 8 வாரத்துக்குள் ஊக்க ஊதிய உயர்வை வழங்க 2014 செப்.18-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரி(பரமக்குடி) பழனியாண்டி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரி பாலசவுந்தரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு