Skip to main content

"பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த ஏற்பாடு'


பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்கு
வரத்து துறை சார்பில் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கி அவர் மேலும் பேசியது:
நிகழாண்டில் சாலைப் பாதுகாப்பு வார விழா பாதுகாப்பு என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல, அது வாழ்வின் வழிமுறை என லட்சிய நோக்கத்துடன் எல்லோரும் கடைப்பிடித்திடும் வகையில் நடைபெறுகிறது.
வாகன நெருக்கடி மிகுந்த இந்த காலகட்டத்தில் சாலைப்பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். அப்போதுதான் விபத்துகளைத் தவிர்க்க முடியும். சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியப் பங்கு மாணவ சமுதாயத்திடம்தான் உள்ளது.
இன்றைய சூழலில் 18 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகள் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதை பெற்றோர் ஊக்குவிப்பது தவறு.
18 வயது பூர்த்தியாகி முறையாக லைசென்ஸ் பெற்ற பின்னர்தான் வாகனங்களை இயக்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் பாடமாக எடுக்க ஏற்பாடு செய்யப்படும். அனைவரும் சாலை விதிகளை மதித்துச் செயல்பட வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமரவேல், கொங்கு கல்விக் குழுமத் தலைவர் அட்லஸ்நாச்சிமுத்து, அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல மேலாளர் சுப்ரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, சதாசிவம், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு