Skip to main content

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று (ஜன.27) மாலை வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த நவம்பரில் நடத்த
ப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட உள்ளன. பல்கலைக்கழகத்தின்  www.unom.ac.in
இணையதளம் மூலம் முடிவுகளை மாணவர்கள்
 தெரிந்துகொள்ளலாம்.விடைத்தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், புதன்கிழமை (ஜன.28) முதல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல் மதிப்பெண் மறு கூட்டலுக்கும் புதன்கிழமை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு