Skip to main content

கோளரங்கத்தில் கணித மாதிரி வடிவமைப்பு போட்டி


திருச்சி, அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கணித மாதிரி வடிவமைப்புப் போட்டி ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பாடத்திட்டம் சார்ந்த வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கு
ம் பள்ளி மாணவ, மாணவிகள், கணித சூத்திரம், கருத்து ஆகியவற்றை விளக்கும் வகையில் கணித மாதிரி வடிமைப்புகளை வழங்க வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை மற்றொரு பிரிவாகவும் கொண்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு பிரிவுக்கு ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 20-ம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431- 2332190, 2331921 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோளரங்க திட்ட இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்க்கோவன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு