Skip to main content

கோளரங்கத்தில் கணித மாதிரி வடிவமைப்பு போட்டி


திருச்சி, அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கணித மாதிரி வடிவமைப்புப் போட்டி ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பாடத்திட்டம் சார்ந்த வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கு
ம் பள்ளி மாணவ, மாணவிகள், கணித சூத்திரம், கருத்து ஆகியவற்றை விளக்கும் வகையில் கணித மாதிரி வடிமைப்புகளை வழங்க வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை மற்றொரு பிரிவாகவும் கொண்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு பிரிவுக்கு ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 20-ம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431- 2332190, 2331921 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோளரங்க திட்ட இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்க்கோவன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா