Skip to main content

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ப
யிற்சி நிறுவனம் சார்பாக மாவட்ட அளவில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய மற்றும் நவீன கற்றல், கற்பித்தல் கருவிகள், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் முறைகளை, நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
அங்கு செயல்படும் நவீன கல்வி முறைகள், வகுப்பறைக்கு வெளியே, கலை, உடற்கல்வி, பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகள் ஆகியவற்றை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளை பற்றி www.tnscert.org/innovation என்ற இணையத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரமா பிரபாவை 94444 53987 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்