Skip to main content

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ப
யிற்சி நிறுவனம் சார்பாக மாவட்ட அளவில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய மற்றும் நவீன கற்றல், கற்பித்தல் கருவிகள், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் முறைகளை, நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
அங்கு செயல்படும் நவீன கல்வி முறைகள், வகுப்பறைக்கு வெளியே, கலை, உடற்கல்வி, பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகள் ஆகியவற்றை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளை பற்றி www.tnscert.org/innovation என்ற இணையத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரமா பிரபாவை 94444 53987 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா