Skip to main content

மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள்

பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள் அறிவிப்பு
                
பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான தகவல் மையத்தின்
தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


அமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 24–ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பன்றி காய்ச்சல் என்பது அந்தந்த பருவ காலங்களில் காணப்படும் குணப்படுத்தக்கூடிய சாதாரண புளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அதன் தரத்தை தற்போது வகைப்படுத்தியுள்ளது. முன்புதான் அது கடுமையான நோய் என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

சிறப்பு மையங்கள்
தற்போது பன்றி காய்ச்சலுக்கு (டாமி புளூ) என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் எளிதாக குணப்படுத்தலாம். தமிழக அரசு மருத்துவ நிலையங்களில் தேவையான அளவு டாமி புளூ மாத்திரைகள் (1.5 லட்சம்) தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலை கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிங் மருத்துவநிலையம் உள்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இதுதவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலை கண்டறிவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு வார்டுகள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் (தொலைபேசி எண்.044 24350496, 044 24334811, 94443 40496 மற்றும் 93614 82899) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தடுக்கும் வழிகள்
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவவேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒருமுறை கைகளை கழுவவேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பீதி வேண்டாம்
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடையவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு