Skip to main content

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு


கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.


உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அ
ரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கல்வி நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தற்போது யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து, பல்கலைகளுக்கு எழுதி உள்ள கடிதம்:


* யு.ஜி.சி.,யால் அங்கீகாரம் பெற்ற, அனைத்து பல்கலைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (பி.எப்.எம்.எஸ்.,) பதிவு செய்வதுடன், மாணவர்களிடம் விண்ணப்பங்களை, வங்கி கணக்குடன் பெற்று, அவற்றை ஆன்-லைனில், பதிவு செய்ய வேண்டும்.


* அந்த விண்ணப்பங்களை, பி.எப்.எம்.எஸ்., இணையதளத்தில், காலதாமதமின்றி உடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் மீதான பாகுபாடு களையப்படும்.


* அனைத்து பல்கலைகளும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா