Skip to main content

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு


கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.


உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அ
ரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கல்வி நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தற்போது யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து, பல்கலைகளுக்கு எழுதி உள்ள கடிதம்:


* யு.ஜி.சி.,யால் அங்கீகாரம் பெற்ற, அனைத்து பல்கலைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (பி.எப்.எம்.எஸ்.,) பதிவு செய்வதுடன், மாணவர்களிடம் விண்ணப்பங்களை, வங்கி கணக்குடன் பெற்று, அவற்றை ஆன்-லைனில், பதிவு செய்ய வேண்டும்.


* அந்த விண்ணப்பங்களை, பி.எப்.எம்.எஸ்., இணையதளத்தில், காலதாமதமின்றி உடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் மீதான பாகுபாடு களையப்படும்.


* அனைத்து பல்கலைகளும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு