தமிழக அரசால் நடத்தப்படவுள்ள வனத்துறை அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதுக்கோட்டையில் நடைபெ
றும் இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்.
இதுகுறித்து தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சா. விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வனத்துறை அலுவலர் பணிக்காக வரும் 22.2.2015-ல் போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுகை பிருந்தாவனம் பகுதியில் உள்ள என். ஜெயராமன் பல் மருத்துவமனை மாடியில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பா. சீனிவாசனை 97864 41417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.