Skip to main content

பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்
கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டுக்கு முன் 3 ஆண்டு பாலிடெக்னிக் படிப்பை
மேற்கொண்டவர்களும், 2007-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டு பகுதி நேர பாலிடெக்னிக் படித்தவர்களும் மட்டுமே இந்த கருணை அடிப்படையிலான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியலுக்கு ரூ. 30, பதிவுக் கட்டணமாக ரூ. 25 அவரவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17 கடைசித் தேதியாகும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா