மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 27ம் தேதிக்குள்
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் கால அவகாம் வழங்கியுள்ளது