Skip to main content

புதிய உத்திகளைக் கையாளுங்கள்:ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்


புதிய வகுப்பறை உத்திகளை கையாளக் கூடிய ஆசிரியர்கள், தங்களது புதிய உத்திகளை பரவலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்துக்குள்பட்ட திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய
, நவீன
கற்றல் கற்பித்தல் கருவிகள், உபகரணங்கள், வெளி மாநில, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் முறைகள் செயல்பாடுகளை நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திய, பயன்படுத்தப் போகும் முறைகள், வகுப்பறைக்கு வெளியே கலை உடற்கல்வி சீரிய விழுமங்கள் பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகளை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பாக ஆசிரியர்கள் தங்களது உத்திகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்ண்ய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 25-க்குள் பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுமை வளங்கள் என்பது வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப
கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும்
வளங்களாகும். அவை கற்பித்தல் முறைகளாகவோ, துணைக் கருவிகளாகவோ, அணுகு முறைகளாகவோ இருக்கலாம்.
கணினி வளங்கள் என்பது கணினிகளைப் பயன்படுத்தி எளிய முறையில் மாணவர்களிடையே கற்றல்- கற்பித்தல் செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளும் ஆகும்.
உதாரணமாக, காணொலிக் காட்சிப் படங்கள், குறுந்தகடுகள் ஆகியன மூலம் கற்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ரமாபிரபாவை 9444453987 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்
பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா