Skip to main content

புதிய உத்திகளைக் கையாளுங்கள்:ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்


புதிய வகுப்பறை உத்திகளை கையாளக் கூடிய ஆசிரியர்கள், தங்களது புதிய உத்திகளை பரவலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்துக்குள்பட்ட திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய
, நவீன
கற்றல் கற்பித்தல் கருவிகள், உபகரணங்கள், வெளி மாநில, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் முறைகள் செயல்பாடுகளை நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திய, பயன்படுத்தப் போகும் முறைகள், வகுப்பறைக்கு வெளியே கலை உடற்கல்வி சீரிய விழுமங்கள் பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகளை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பாக ஆசிரியர்கள் தங்களது உத்திகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்ண்ய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 25-க்குள் பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுமை வளங்கள் என்பது வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப
கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும்
வளங்களாகும். அவை கற்பித்தல் முறைகளாகவோ, துணைக் கருவிகளாகவோ, அணுகு முறைகளாகவோ இருக்கலாம்.
கணினி வளங்கள் என்பது கணினிகளைப் பயன்படுத்தி எளிய முறையில் மாணவர்களிடையே கற்றல்- கற்பித்தல் செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளும் ஆகும்.
உதாரணமாக, காணொலிக் காட்சிப் படங்கள், குறுந்தகடுகள் ஆகியன மூலம் கற்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ரமாபிரபாவை 9444453987 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்
பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்