Skip to main content

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்
மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
 வன அலுவலர், கள உதவியாளர் உள்ளிட்ட 181 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. வேளாண்மை,
கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், தோட்டக்கலை, கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 17 பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் இந்தத்
தேர்வை எழுதலாம்.
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தப் பயிற்சி வகுப்பு
நடைபெற உள்ளது.
 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்கான ஆதாரம், ஒரு புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 2-ம் தேதிக்குள்
பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா