Skip to main content

அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது
சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’
விருது இன்று வழங்கப்படுகிறது.

‘அசோக சக்ரா’ விருது
ராணுவத்தில் சிறந்த சேவை புரிபவர்களுக்கு குடியரசு தினவிழாவையொட்டி மிக உயர்ந்த விருதான ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு அசோக சக்ரா விருது, காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்த் தியாகம் செய்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.

உயிர்த் தியாகம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25–ந்தேதி காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த 2 தீவிரவாதிகளை படுகாயம் அடைந்த நிலையிலும் தனது உயிரைப் பொருட்படுத்தாது, முகுந்த் வரதராஜன் சுட்டுக் கொன்று சாகசம் நிகழ்த்தினார்.

இதேபோல் நாயக் நீரஜ்குமார், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24–ந்தேதி காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது சக வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், துணிச்சலுடன் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றார்.

இவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் துணிச்சல் மற்றும் உயிர்த் தியாகத்துக்காக அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.

கீர்த்தி சக்ரா, சூர்ய சக்ரா
இதேபோல் கீர்த்தி சக்ரா விருதுக்கு கேப்டன் ஜெய்தேவ், சுபேதார் அஜய் வர்தன், சுபேதார் கோஷ்பகதூர் ஆகிய 3 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் அஜய் வர்தனுக்கு மரணத்துக்கு பின்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சூர்ய சக்ரா விருதுக்கு 9 ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நேற்று வெளியிட்டார்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்