Skip to main content

முதுகலை பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு


விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விமானப்படை, நாட்டின் விண்வெளி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இந்த படைப்பிரிவில் குறிப்பிட்ட பயிற்சியின் கீழ் தகுதி
யான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது மெட்டராலஜி பிரிவுக்கு, 'கோர்ஸ் காமென்சிங்-ஜனவரி2016' பயிற்சியின் கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன. பயிற்சியில் சேர்வதற்கான இதர தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...


வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1-1-2016 தேதியில் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

கணிதவியல், புள்ளியியல், ஜியோகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஓசனோகிராபி, மெட்டராலஜி, அக்ரிகல்சரல் மெட்டராலஜி, ஈகாலஜி அன்ட் என்விரான்மென்ட், ஜியோபிசிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி போன்ற அறிவியல் முதுகலை படிப்புகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இளங்கலை பிரிவில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 

பார்வைத்திறன், உடல், உள நலம் ஆகியவை விமானப்படைப் பிரிவிற்கு ஏற்ற அளவில் உள்ளதா என பரிசோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இருநிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். முதல் நிலையில் சான்றிதழ் சரிபார்த்தலும், இரண்டாம் நிலையில் உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடைபெறும். இறுதியாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 52 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயார் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டுவதுடன், தேவையான சான்றிதழ் நகல்கள், 2 புகைப்படங்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சாதாரண தபால் முறையில் POST BAG NO.001, NIRMAN BHAWAN POST OFFICE, NEW DEL HI 110106  என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 

விண்ணப்பங்கள் 14-2-15-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்   www.careerairforce.nic.in   என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு