Skip to main content

ஐஐடி-இல் மாற்றுத்திறனாளிகள் உபகரண ஆராய்ச்சி மையம்


மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண ஆராய்ச்சி,  மேம்பாட்டு மையம் சென்னை ஐஐடி-இல் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் நவீன சக்கர நாற்காலிகள், செயற்கை மூட்டுகள் என்பன உள்ளிட்ட பல்வே
று உபகரணங்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய வகையிலும் உருவாக்கும் நோக்கத்தோடு "இந்த டிடிகே ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்' தொடங்கப்பட்டுள்ளது.   சென்னை ஐஐடி முன்னாள் மாணவரும், டிடிகே
நிறுவனங்கள் குழுமத் தலைவருமான ஜெகனாதனின் ரூ. 3.68 கோடி நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் ஐஐடி இயந்திரவியல் துறை பல்வேறு ஆராய்ச்சிகளையும், உபகரண மேம்பாடுகளையும் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து ஐஐடி பேராசிரியர்கள் கூறியது:
 ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசனும், அவருடைய மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கானச் செயற்கை மூட்டு, கால், சக்கர நாற்காலிகள் ஆகியவற்றுக்கான மாதிரிகளை ஏற்கெனவே உருவாக்கியுள்ளனர்.
தற்போது இந்தப் புதிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டிருப்பது, மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன உபகரணங்களைக் குறைந்த விலையில் உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
பல்வேறு மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேவை அறிந்து அதற்கேற்ற ஆராய்ச்சிகளும், மேம்பாட்டுப் பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு