Skip to main content

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: சிறப்பு அஞ்சல் தலை இன்று வெளியீடு


இந்திய அஞ்சல் துறை சார்பில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
ஹரியாணாவின் பானிபட்டில், சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்தி
ர மோடி வெளியிடுகிறார்.
பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம் மத்திய அரசால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதை முன்னிட்டு, இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிடுகிறது. சென்னை, புதுச்சேரியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையங்களில் சிறப்பு அஞ்சல் தலை, தகவல் அட்டை, முதல் நாள் உறை போன்றவை விற்பனை செய்யப்படும்.
மேலும் அஞ்சல் கணக்கு தொடங்கி, சிறப்பு அஞ்சல் தலைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று கொள்ளும் வசதியும் நடைமுறையில் உள்ளது என அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா