இந்திய அஞ்சல் துறை சார்பில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
ஹரியாணாவின் பானிபட்டில், சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்தி
ர மோடி வெளியிடுகிறார்.
பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம் மத்திய அரசால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதை முன்னிட்டு, இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிடுகிறது. சென்னை, புதுச்சேரியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையங்களில் சிறப்பு அஞ்சல் தலை, தகவல் அட்டை, முதல் நாள் உறை போன்றவை விற்பனை செய்யப்படும்.
மேலும் அஞ்சல் கணக்கு தொடங்கி, சிறப்பு அஞ்சல் தலைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று கொள்ளும் வசதியும் நடைமுறையில் உள்ளது என அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.